படைபெற்றப் பேரழகே
படைபெற்றப் பேரழகே...!
ஆண் வர்க்கத்தின் -
இமைப் பறவைகளில்
ஏறிக் கொண்டு...
இதய ராஜ்ஜியத்தில் -
பவனிவர துடிக்கும்
பாவையரே...!
சீசரைப் போன்ற -
வைரக் கோட்டைகளை
எல்லாம் தகர்த்து
எறியும்...
தந்தச் சிலைகளே...!
உம் -
விழி அம்பு
வதை பட்டு....
மொழி வாளின்
சிறைபட்டு.....
மழுபோன்ற -
இடைதொட்டு....
எழும் பாதத் -
திடைபட்டு....
அடைபட்ட
மனமேங்கும்....
படைபெற்றப்
பேரழகே...!