மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் போட்டி கவிதை

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம் !

மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும் !

இரக்கம் தொலைந்து !
அன்பை மறந்து !
ஆங்கோர் விலங்கு
அலைகிறது !

பணப்பசிக்கு
பலியாகிறது !
மானம் மரியாதை !

சுயமரியாதை
கெட்டவன் இங்கே
தலைவன் !
சொம்பு அடிப்பவன்
குபேரன் !

பட்டு சட்டை
போட்டு பச்சை
பொய் உரைப்பார்!
ஏழை என்றால்
நெஞ்சு நிமிர்த்தி
விறைப்பார்!

பகல் திருட்டு
செய்வோருக்கு
விடுதலை !
விலைபோகிறது !

பணம் முன்னே
தண்டனைகள்
விலைமாது ஆகிறது !

நாணயம் தவறி
நயவஞ்சகம்
செய்வோருக்கு
நாற்காலிகள்
தவம் புரிவதில்லை !
கால் இருந்தும்
ஊனம் என
மாக்களுக்கு
தெரிவதில்லை !

வீதிகொரு கட்சி !
சாதிகொரு கட்சி !
இன்று !
நீதிக்கட்சி
கொன்றுவிட்டு
வந்த திராவிடம்
இதுவா ?

பட்டாள வீரன்
என இருந்த
பழந்தமிழன்
முட்டாளாய் போனது
ஏன்?

இலவசங்கள்
வாங்கிகொண்டு
அறிவை அடகுவைத்தோம்!
படகு போன பின்னே !
துடுப்பு எதற்கு!

எடுப்பார் கைபிள்ளையோ
ஈன தமிழன் ?
தன்மான தமிழன்
எங்கே உள்ளான்?

தேட வேண்டும் !
எல்லோர்க்கும்
தேடல் வேண்டும் !

தன்மான
தமிழனின்
முகவரி கேட்டு !
விரைவில்
வரக்கூடும்
புதிய தலைமுறையில்
விளம்பரங்கள் !

அதுவரை
மானம்கெட்ட
மக்களுக்கு!
மரியாதையுடன்
கண்ணீர் அஞ்சலி !

எழுதியவர் : செந்தூர் பாண்டியன் (14-May-15, 5:23 am)
பார்வை : 295

மேலே