என் இனிய அறை வாசிகளே

வெளிநாட்டுல இருக்குற
வெள்ளசாமிட்ட கேட்டா
இருந்தாலும் அனுப்புன மாதிரி
பணம் வந்து சேர
நாளக்கி ஆகும்பான்..

வீட்டுல இருந்து வர்ற
ரொனால்டுட்ட கேட்டா
மன்னிச்சிரு மச்சி
கைசெலவுக்கு தான்
சரியா இருக்கும்பான்..

இருங்காட்டு கோட்டைல
இருக்குற ஐயானர்ட கேட்டா
என் நிலமைய வச்சி
மேன் விஸஸ் மாசக்கடைசினு
டிஸ்கவரில நாற்பது பகுதி
ஓட்டலாம்பான்..

நம்ம சமூன் எண்ணை தேடி
செல்லாத காசுல சாதனையா
தென்மதுரை வைகை நதி
முழுசா ஓடும் முன்னே
சிவப்பு பொத்தான
பொசுக்குன்னு அமுக்க..

அரை நிமிசம் கழிச்சி
அவன் கூப்புட்ட சத்தம்
சோறா காத்துல தெரிய
எப்படி இருக்கன்னு
கேட்டதெல்லாம் சும்மா..

நண்பனா வாக்கப்பட்டதுக்கு
செய்யுறேன்னு சிரிச்சிகிட்டே
அவன் அனுப்புன ஆயிரத்துல
பொழச்சது இந்த மாசம்.

சீக்கிரம் வந்துவிடு
என் இனிய
ஒன்றாம் தேதியே..!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (22-May-15, 8:15 am)
பார்வை : 114

மேலே