அடிமை
பக்கத்து வீட்டு குழந்தையின்
குறும்பை ரசித்தாள்
பெற்றோரிடம் தொலைபேசியில்
நலம் விசாரித்தாள்
மண்டி கிடக்கும் புதர்களை
அகற்றி தோட்டத்தை அழகுபடுதினாள்
பிள்ளைகளின் படைப்புகளை
பொறுமையுடன் ரசித்தாள்
இவையெல்லாம் நடந்தது
மின்சாரம் தடைபட்டு அவள்
சீரியல் பார்க்க முடியாத
ஒரு மாலை பொழுதினில்....