என் அழகான வாழ்க்கை…

அன்பிற்கு எல்லையாய் அன்னை !
அரவணைத்து வளர்க்கின்றாள் என்னை !
அறிவிற்கு சிகரமாய்த் தந்தை !
அறிவுரையால் சீரானது என் சிந்தை !

கல்வியைக் கண்ணாய்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் !
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவர்கள் !
கலைகளைச் சிறப்பாய்க் கற்பிக்கும் குருமார்கள் !
கலைமகளின் உருவாய்த் தோன்றியவர்கள் !

அனுபவங்களைப் பகிரும் தாத்தா பாட்டி !
அணுகினேன் அவர்களை இருகரம் நீட்டி !
அன்றாடம் என்னை வாழ்த்தும் தாத்தா !
அடைந்தேன் மகிழ்வை அவரது பாட்டால் !

எப்போதும் சூழ்ந்து இருக்கும் சுற்றம் !
எப்பிறப்பிலும் கிடைக்காத பாச பந்தம் !
எங்கும் நிறைந்திருக்கும் நண்பர் கூட்டம் !
எங்கு தேடினாலும் கிடைக்காத பூந்தோட்டம் !

பசுமை வீசும் சிங்கார கிராமங்கள் !
பசியைப் போக்கும் நிலதெய்வங்கள் !
பார்ப்பவர் மனம் கவரும் தோட்டம் !
பரவசத்தைப் பரப்பும் பூக்கள் கூட்டம் !

அன்பான தாய் தந்தை !
அழகான குடும்பம் !
அறிவார்ந்த குருமார்கள் !
அனைத்துமாய் ஆண்டவன் !
அரவணைக்கும் உறவினர்கள் !
அக்கறையுள்ள நண்பர்கள் !

எத்துனை அழகான வாழ்க்கை !
எத்தனை பிறப்பிலும் கிடைக்காத பேறு !
அத்தனை பேருக்கும் நன்றிகள் நூறு !

- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (23-May-15, 7:04 pm)
பார்வை : 1615

மேலே