சின்ன சின்ன விஷயங்கள்

பூ
உதிர்கிறது...

தன் சிறகுகளைப் பார்க்கிறது
வண்ணத்துப் பூச்சி.
*********************************************************************
மழை பெய்து கொண்டிருக்கிறது...

காகிதக் கப்பல்களில்
வருகிறது கடவுள்.
********************************************************************
வீடுகள் இரகசியங்களால் ஆனவை.
அதன் கற்களில் படிந்திருக்கக் கூடும்....
சில கேவல்களும்...சில கண்ணீர்த் துளிகளும்...
சில நேரங்களில்...
ஒரு குழந்தையின் சிரிப்பும் கூட.
*********************************************************************
வாழ்க்கை...
மழை நேரத்துக் கோப்பைத் தேனீர் அல்ல.
பொருந்தாத வேடங்களில்...
ஒவ்வாத வசனம் பேசி...
திசையற்றுத் திரிகிறது யாருக்கும்.
************************************************************************

எழுதியவர் : rameshalam (23-May-15, 8:32 pm)
பார்வை : 166

மேலே