உண்மை ஊழியனை ஊரேப் போற்றும் பகுதி இரண்டு

உண்மை ஊழியனை ஊரேப் போற்றும்.... (பகுதி இரண்டு ...)

நம்முடைய தலைவர்கள் பலரும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பெரும்பாடு பட்டனர். இல்லையென்றால், நம் தேசப்பிதா காந்தியடிகளும், முதல் குடியரசு தலைவர் இராஜேந்திர பிரசாத், முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, லல்பஹதூர் சாஸ்திரி, சட்டமேதை அம்பேத்கர் போன்றவர்கள், நம்முடைய நினைவிலே இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய நிலையென்ன? அனைத்தும் தலைகீழாக மாறி, உலகம் முழுவதும், இலஞ்சம், லாவண்யன்களால்,அரசை நடத்துபவர்களும், அரசாங்க அதிகாரிகளும், பண முதலைகளுக்கு, அவர்களின் செயல்பாடுகளுக்கு, சட்டங்களை, அடிக்கடி மாற்றி, மக்களின் வரிபணத்தில், மக்களுக்கு வசதிகளைச் செய்துதராமல், தன் குடும்பம், தன் மக்கள், தன் சுற்றத்தார், தன் சமூகமென சென்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்று திருந்துவார்கள் என்று நமக்கும் தெரியாது, அவர்களுக்கும் தெரியாது. உண்மை ஊழியம் மாறி, தன் ஊனுக்காக, பிறரை ஏமாற்றும் காலம் தான் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

நாட்டு மக்களும், இவர், இந்தத் தலைவர் நன்மைச் செய்வார், அந்தத் தலைவர் நன்மைச் செய்வார் என்றுக் கருதி, தன் வாக்கினை அவர்கள், தன் தலைவர்கள் அரசு அமைக்க அனுமதிக்கிறார்கள், அவர்கள் என்ன வாககுறுதித் தந்தார்கள், இந்த நாடு உய்க்க என எண்ணாமல்.

ஆனால், உலகளவில் மக்களைச் சுரண்டி, சுரண்டித் தான், தாங்கள் உண்டு வாழ்ந்து, நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் நாட்டு மக்களுக்காக என்னச் செய்தோம், பிரதிபலன் நோக்காமல், ஒவ்வொரு ஊழியனும், நினைத்தால் தான், இந்நாடும், இவ்வுலகமும், நல்வழிப்படும்... நாடும் நல்வழிப்படும்...

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (25-May-15, 8:27 pm)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே