என் வாழ்க்கை

பிறந்த போது சுகத்தை நானோ உணரவில்லை
இறந்த பின்பும் துளியும் துக்கம் வரவில்லை
நடுவே கொஞ்சம் நடந்து செல்ல
வலியும் வேதனையும் வாட்டி வதைக்க
வன்மம் இல்லா இன்பம் எங்கோ தொலைந்து போக,
விரும்பி ஏற்கும் வெறுப்புகளும்
விலக்கி வைக்கும் நிம்மதியும்
வந்து வந்து போகிறதே
காரணம் என்னவோ
புரியாமல் போகிறதே
அன்பே காரணம் என்னவோ..
தெரியாமல் நிற்கின்றேன்
நிழல் நிற்கும் இடத்தினிலே...!

எழுதியவர் : த.பிரபாகரன் (7-Jun-15, 8:52 am)
Tanglish : en vaazhkkai
பார்வை : 455

மேலே