வண்ணம்
கண்ணீர் துளிகளுக்கு வண்ண
குறிப்பு இருந்திரிக்க வேண்டும்
வாசல் தாண்டி
விடைபெற்று வெளிநடக்கும் நேரம்
கண்கள் காதில் சொல்லியனுப்பும்
தூரிகையால் கைகள் நனைக்கும்
விரல்கள் பிடித்து விளக்கங்கள் சொல்லும்
வழிந்தோடும் பாதையினில்
விலகாமல் கன்னம் சேர
வண்ணங்கள் மட்டும் இருந்திரிந்தால்
பார்த்திருப்பாய் !
வானவில் என் கண்களில்
நீ திரையில் விழும்பொழுது