காதல் ஊர்வலம்
காற்றினுள் நுழைந்து வந்து
காதல் சொன்னேன் கேளாயோ!!
உன் கருங்கூந்தற் சிறுபூவில்
நுழைந்து வந்து காதல்
சொன்னேன் கேளாயோ!!
கதிர் வர காலை காத்திருப்பேன்
உன் காதல் நீ சொல்ல,
கதிர் மறையும் நேரம் வரை உனக்கு
என் காதல் நீ ஏற்க.
பதில் ஏதும் இல்லையேல்,
உன் கண் முன் என் இறுதி
ஊர்வலம் போகும் பாராயோ♥♥