முரணில் பூத்தவை

கொட்டும் பணத்தால்
கொடுக்காய் வாழ்க்கை
மிடுக்காய் போர்வை
நஞ்சு கலந்த வாழ்க்கையே
நாலு வேளையும்

இல்லாத அணைக்கு
இருக்குது நிதி
இல்லாத நதிக்கு
இன்னும் சில நாளில் அணை
இருக்கிறது கண்ணீர்
இல்லை இதற்கு ஓர் ஆணை

மீன்களை திருடுவதால்
சுட்டார்கள்
மீனவர்களை திருடினால் ?

அரசு மருத்துவமனைகளில்
அரிசி இலவசம்
வாழ்க்கைக்கு அல்ல
வாய்க்கு ..!

குண்டு துளைக்காத
கூண்டுக்குள் நின்று கொண்டு
ஜனாதிபதியின்
சுதந்திர உரை

தாஜ்மகாளுக்குள் தூங்குவது
மும்தாஜா
இந்தியாவா?

தங்கத்தை விதைத்து
வெள்ளியை அறுத்து
வெள்ளரிக்காயை விற்று
வெறும் கையை வாங்கி வந்த
விவசாயி

எழுதியவர் : Raymond (15-Jun-15, 5:04 pm)
பார்வை : 285

மேலே