காத்திருப்பேன்

கண் சிமிட்டும் என்னிரு
இமைகளின் மோதலில் கூட
வலி எழுகின்றதடி என்னிரு
விழிப் பார்வையிலிருந்து நீ
தொலைந்து தொலைவினில்
போனதனால்...
கருஞ்சிகை களைத்து
கடக்கும் காற்றுக் கூட
கனக்கின்றதடி என்
காதல் களைத்து உன்
நெஞ்சம் கல்லாகிப்
போனதனால்...
நீயில்லா என் இரவுகளில்
மூடிய இமைகளுக்குள் விழிப்பு
நீயில்லா என் பகல்களில்
திறந்த இமைகளுக்குள் உறக்கம்...
என் உயிர் காயும்
கடைசி சொட்டு வரை
உன் கரம் சேர காத்திருப்பேன்
உன் நிழல் மீதே நானிறப்பேன்.
செ.மணி