தந்தையே வா தாயே வா
கரைந்து இனம் கூட்டி
பகிர்ந்துண்ணும் , இறந்தால் கூடி
சோகம் பாடும் காக்கை இனம் !
வாழும் போது மறந்து புறக்கணித்து
சாவுக்குப் பின் கூவி அழைத்து
சோறு போடும் மனித இனம் !
செத்த பின் விருந்திற்கு அழைப்பு !
காக்கைச் சிறகினிலே தந்தையே வா
தாயே வா ......!
----கவின் சாரலன்