எப்போது வருவாய்.....

தனியாய் நடக்கிறேன்
என்னோடு
துணையாய் வருகிறது
மழை....

பூஞ்சாரல் தூவிட
நனைகிறேன்
உடல் முழுதும்....
ஆனால்
உள்ளுக்குள் நான் இன்னும்
வெப்பமாய்.....

உள்ளத்தில்
பூஞ்சாரல் தூவிட
வைப்பது நீயும்....
உன்
நினைவுகளும் மட்டும்தான்....

எப்போது வருவாய்
காத்திருக்கிறேன்
உனக்காய்....

எழுதியவர் : மீரா (13-May-11, 1:46 am)
சேர்த்தது : meera
Tanglish : eppothu varuvaay
பார்வை : 438

மேலே