பச்சை குத்திவிடு

அன்பே
உனக்காக நான் எழுதிய
கடிதத்தில் கவிதை வரிகள் இல்லை....
ஆனால்
அதில் நீ
உன் விரல் நுனியால் தடவிப்பார்
உன்னை அறியாமலேயே - உன்
இதழ்கள் உச்சரிக்க தொடங்கிவிடும்!
உச்சரித்த உன் இதழ்களை அதில்
பச்சை குத்தி அதை அப்படியே
திருப்பி அனுப்பிவிடு எனக்கு.......................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்