வேடிக்கை மனிதர்கள்

அதிகாலை தேநீர் ஆனந்தம்,
அது
முடித்து இசை குளியல் ஆனந்தம்,
அமைதி தரும் இறை வழிபாடு,
அதற்கடுத்து
இனிய சாப்பாடு..............

இவை முடித்து வேலைக்கு சென்றான்
அங்குதான் பல வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்களோடுதான் - அவன்
வாழ்க்கை வாடிக்கையாகிறது ..............

அவனுக்காக வாழ்வது
காலை உணவு வரை மட்டுமே..........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (2-Jul-15, 10:48 am)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 205

மேலே