காதலை பதியவைக்க

பெண்ணே
உன்னில் காதலை பதியவைக்க
காலம் கருதாமல் என்
கண்கள் சுழன்று கொண்டிருந்தது.........

விழிகளில் வேறு பிம்பம் இல்லை,
பல மொழிகளில் ஒரு வார்த்தை தேடினேன்,
என்
பாதங்கள் கூட வேர்வை சிந்தியது
உன் வரவிற்கு நான் காத்திருந்தபோது.........

நீ எதை நேசிக்கிறாய்
என யோசித்து, யோசித்து
சுவாசித்தேன்
உன்னில் என் காதலை பதியவைக்க...............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (2-Jul-15, 4:21 pm)
பார்வை : 70

மேலே