கவியின் கருவாய்

நினைவுகளின் நாயகனுக்காய்
இதயத்தை இடம் மாற்றுகிறேன்..

அவன் காதலுக்கு காணிக்கையாய்,
தினம் ஒரு கவி வரைகிறேன்..!

நீ ரசித்து படிக்கும் போது,
உனக்காக எழுதிய வரிகள்
உயிர் கொண்டு எழுகின்றன..

உன் இதழ் வழி ஒலிக்க,
அவை இங்கே - புது
அர்த்தம் பெறுகின்றன...

செய்த தவம் என்ன - இவள்
காதலும் காகிதத்தில் கரையாது,
உரியவன் கை சேர!..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (10-Jul-15, 10:14 pm)
Tanglish : kaviyin karuvaay
பார்வை : 217

மேலே