ஓ ஹோ

அடுத்த அப்துல்கலாம்...!!!
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??" (நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ)

எழுதியவர் : சேர்த்தவர் (18-Jul-15, 11:34 am)
பார்வை : 396

மேலே