இதுக்குத்தான்

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..,
அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு..
அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி..,
சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே இடத்துல நின்னு..,
தலைய மட்டும் ஆட்டினா..!
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குதான் தம்பி.,
நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?

எழுதியவர் : சேர்த்தவர் (18-Jul-15, 11:33 am)
பார்வை : 395

சிறந்த நகைச்சுவைகள்

மேலே