நீ மட்டும் போதுமடி --அரவிந்த்

உன் நினைவோடு தினம் வாடினேன்,
என் காயங்களையும் காதல் செய்கிறேன்,
கண்ணீரில் ஒரு காவியம் வரைகிறேன்
அதை படித்து கரைகிறேன்..

கனவுகள் வாங்கிட
கண்களை விற்றவன் நான்
கனவோடு வாழ துவங்கிட
என் நிஜம் இங்கே
புதைந்து போனது..

உயிர் எழுத்து பன்னிரெண்டும்
பொய்யாய் போனது,
"உன் பெயரின் எழுத்துகளே
என் உயிராய் மாறியது"

என் சுவாச குழலிலும்
உன் வாசம் வீசுதடி,
நான் ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் போதெல்லாம்
உன் நினைவு வந்து போகுதடி..

நீ பேசிய வார்த்தைகள் மட்டும்
என்னிடம் உள்ளதடி,
நான் பேசிட
வார்த்தைகள்
மிச்சம் ஏதும் இல்லையடி..

மரணத்தின் வாயிலிலும்
என் தேவை நீயடி,
நீ இல்லா நேரம் தான்
மரணம் என்னை தீண்டுமடி..!

எழுதியவர் : அரவிந்த் . C (20-Jul-15, 7:50 am)
பார்வை : 156

மேலே