அவளும் அவனும் காதலும்

கடவுளும் காதலிக்கத்தான்
மனிதராய் பிறக்கின்றானோ???
என்றுக்கூட சிந்திக்க வைத்தாள்
அவள்....

என்னா! அழகு அவள்
இதற்குமுன்
இத்தனை அழகில்லையே!
அவள்.....
காதல் அவள் அழகை
கூட்டி விட்டதா?
இல்லை
அவள்தான் காதலின் அழகை
கூட்டி விட்டாளோ?

கருப்பு வெள்ளை
மட்டும் இருந்த
அவன் வாழ்வில்
வண்ணங்கள் நிரம்ப செய்தாள்

பாலைவனமாய் இருந்த
அவன் மனதை
தென்றலால் வருடினாள்

கரடு முரடாய் இருந்த
அவன் பாதையை
பூக்களால் நிரப்பினாள்

மலர்களை கூட ரசிக்க
தெரியாதவன் அவன்...
கவிதை எழுத வைத்து
விட்டாள் அவள்

நிஜமாக அலைபவன்
அல்ல....அவன்
ஷாலின் பின்னால்
அலைய வைத்துவிட்டாள் அவள்

இத்தனை மாயங்கள் செய்தது
காதலா?
இல்லை
அவளா?


இப்படி ஒரு அவள் இருந்தால் சொல்லுங்கள் காதல் இல்லாமல் கவிதை எழுத கடுப்பா இருக்கு...

எழுதியவர் : நவின் (24-Jul-15, 5:03 pm)
பார்வை : 1264

மேலே