இம்சை அரசு தர்பார்

இம்சை அரசு "" தர்பார் "
-----------------


இம்சை அரசன்;-"மந்திரியே....இன்றையப் பிரச்சினையை சபையில் தெரிவியுங்கள்..."
என்றதும்,

மந்திரி ராரா;-"மன்னா தொலைக்காட்சியில் மெஹா சீரியல் என்று ஒருசிலர் உப்புச் சப்பு இல்லாதக் கதைகளையும்,அடுத்தவன் குடும்பத்தை எப்படிக் கவிழ்ப்பது என்பதையும் ,கதைகளாகக் காட்டி மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.."
என்றதும்
,சட்டென எழுந்த மந்திரி முரா,
"சீரியல் பார்ப்பவர்கள் தான் முட்டாள் ஆகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது...ஏனென்றால்,,,அப்படிப் பார்த்தால் நம் மன்னர் இம்சை அரசன் சீரியல் பார்ப்பதில்லையே...ஹீ ஹீ ஹீ",'
என மனதில் உள்ளதை சட்டெனக் கூற.,

"அட நன்னாரிப்பயலே....அப்படின்னா என்னைய முட்டாளுன்னு சொல்றியா?...உனக்கெல்லாம் மந்திரி பதவி தந்தேன் பாரு என்னைய சொல்லனும்....",
என இம்சை அரசன் கொலைவெறியுடன் பார்த்தார்..

"மன்னா...உத்தமபுத்திரன் அப்படின்னு ஒரு சீரியல் தற்போது முடிவடையும் நிலைக்கு வந்தது .ஆனால் .தற்போது அந்தக் கதையின் காதாநாயகனுக்கும் சமையல்காரிக்கும் கள்ளக்காதல் என கதையை திசை திருப்பி ஜவ்வாக இழுக்கிறார்கள்...",
என மந்திரி ராரா கூற,

"அந்த சிரியல் தயாரிப்பாளருக்கும் ,சமையல்காரியா நடிச்ச நடிகைக்கும் கனெக்‌ஷன் ஆகிப்போச்சுய்யா. அந்த நடிகை எனக்கு வெயிட்டா ஒரு ரோல் வேணும்னு தினமும் தயாரிப்பாளரை டார்ச்சர் பன்னியிருக்கா .வேற வழியில்லாமல் காதாநாயகனுக்கும் அவளுக்கும் கனெக்‌ஷன்னு கதையை மாற்றி அவள் வீக் கேரக்டரை ஸ்ட்ராங்க் கேரக்டரா ஆக்கிட்டாங்கய்யா,,,",
என இம்சை அரசன் கூறியதும்
"மன்னா இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?",
என மந்திரி "ஓட்டேரி நரி."கேட்க,
"எல்லாம் ஒரு யூகம் தான்...",
என இம்சை அரசர் பெருமையாக சிரித்துக் கொண்டார்.

"கள்ளக்காதல்,,,கோக்குமாக்கு கனெக்கஷன் ,இதில்லெல்லாம் நம் மன்னர் கைதேர்ந்தவர் ஆச்சே...அதான் சட்டுன்னு கண்டுப் பிடிச்சுட்டாரு...ஹையோ...ஹையோ...",
என மந்திரி "டுமீல் குப்பம் வெவ்வாளு ",கைத்தட்டிப் பலமாக ஆரவரம் செய்ததும்..
இம்சை அரசன் முகம் கடுகடுவென மாறியது.
"என்னங்கடா....என்னையப் பார்த்தால் காமெடி பீஸ் மாதிரி இருக்கா உங்களுக்கெல்லாம்...",
என இம்சை கோவமாக கேட்க,
"அப்படி உங்களை யார் சொன்னது மன்னா ?...நீங்க டம்மி பீஸ்ஸூ மன்னா....",
என அவையில் மந்திரி "ஆதிவாசி",எழுந்து குரல் கொடுத்தார்.
"அடப்பாவிகளா உங்க தொல்லை தாங்கலையேடா....",
இம்சை மனம் நொந்துக் கொண்டார்.

"மன்னா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில், மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க்கிறார்கள். அதற்கு சரியான விடை எழுதியவருக்கு நடிகை குசலாம்பாள் கூட ஓர் நாள் டைம் பாஸ் பன்ன ஏற்பாடு செய்து தருவதாக கூறுகிறார்கள்...",
என ஓட்டேரி நரி கூறியதும்....
"என்னது நடிகை குசலாம்பாளுடன் ஓர் நாள் இருக்க ஏற்பாடா???",
என இம்சை அரசன் அரியணையை விட்டு சட்டென எழ,
"ஹலோ ரொம்ப பம்மாதீங்க...நடிகை கூட ஓர் நாள் மத்தியம் விருந்து மட்டும் தான் ஏற்பாடு பன்றாங்க....மற்றபடி நீங்க நினைக்கிறாப்பல ஏதும்மில்லை",
என அவை தளபதி "வண்டு முருகன்", கூறியதும்...
இம்சையின் முகம் வாட்டமானது.

"ஆக்கப்பூர்வமாக,அறிவுப்பூர்வமாக ,சரியான நிகழ்சிகளே தொலைக்காட்சிகளில் அதிகம் இல்லை மன்னா...",
மந்திரி ராரா கூற,...

"முதலில் நீங்க நம்ம நாட்டை ஆக்கப்பூர்வமாக மாற்றுங்க .......",
என்று தொலைவில் ஒருக் குரல் கேட்டது..
"யார் அது?",
இம்சை அர்சன் கம்பீரமாக வினவினார்.
"நான்தான்... உங்களை மன்னராக தேர்ந்தெடுத்த அப்பாவி பொதுஜெனம் மன்னா...",
என அந்தக் குரல் பதில் கூற...

"யோவ் ...நமக்கு ஓட்டுப் போட்ட பொதுஜெனமெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிச்சா சபையே நாறிப்போயிடும்....சீக்கிரமா சபையைக் கலைங்கடா நன்னைப்பசங்களா....",
என்ற இம்சை அரசன் சிட்டாகப் பறந்தார்.................................

எழுதியவர் : தகவல் தளம் (27-Jul-15, 1:35 pm)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே