அவரைப் போல் அல்ல

பணிதனில் நேர்மை
பதவியில் பணிவு
வாழ்வினில் எளிமை
வாக்கினில் சுத்தம்..
கனவினில் மகத்துவம்
நாவினில் நாணயம்..
செயலினில் சிறப்பு
உள்ளத்தில் உறுதி
தாய்மொழிமேல் காதல்
தாய் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
மனிதம் உயிர்மூச்சு
கறைபடா கரங்கள்..
எல்லாம்..இம்மியும்
குறைவின்றி இலங்குகின்ற
நல்லவர் எவருளும்..
உறைகின்றார்..உயிர்க்கின்றார்..
ஒவ்வொரு நொடியும் ..
இருக்கின்றார்..இருக்கின்றார்
இறக்காமல் ...பிறந்துகொண்டே
இருக்கின்றார்...
இறப்பில்லா இனிய தெய்வம்
நம் ......
அப்துல் கலாம்..!
அவரைப் போல் வாழ்வது கூட அல்ல
அவராகவே வாழ்வதே
அவருக்கு அஞ்சலி!

எழுதியவர் : கருணா (29-Jul-15, 9:08 am)
Tanglish : avaraip pol alla
பார்வை : 2365

மேலே