நீ எங்கே
மனதோரம் பூத்தவளே
மல்லிப்பூ சிரிப்பழகி
மந்தையிலே தொலைத்து விட்டேன்
மறுபடியும் என்று காண்பேன்
கிள்ளி கீரையதாய்-என்மனதை
கிள்ளிச் சென்றவளே
கிழக்குச் சீமையில் இருப்பாய் என
கீழ்மனது சொல்லுதடி
தேசாதி தேசமெல்லாம்
தேடி அழைகிறேனே
தேன்மொழியே உன்னைத்
தெய்வம்தான் காட்டிடுமோ
என் கண்ணில்
நீ எங்கே............??