மண்ணுக்கும் பெருமை நீ

மணவறை காணாத நீ
மண்ணறை கண்டு விட்டாய்
மக்களின் மகிழ்ச்சிக்காகவே
மனதார வாழ்ந்து விட்டாய்..

கனவு காணுங்கள் என்று
கண் மூடி விட்டாய் நீ
கவலை படுகிறோம்
கலாமே உன்னை நினைத்து..

உன் கனவெல்லாம் நினைவாக
கண்டிப்பாய் கஷ்ட படுவோம்
கவலை படாதே நீ
மணமகனாய் உறக்கிடு..

மண்ணறையில் நீ
மகிழ்ச்சியாய் இருந்திடு
மண்ணோடு நீ....
அந்த மண்ணுக்கும் பெருமை..

சேர்த்து விட்டாய்
இறந்தும் நீ..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Jul-15, 12:46 pm)
பார்வை : 78

மேலே