என் காதலின் ஏக்கங்கள்

ஏங்கினேன்,ஏங்கினேன்!!!

ஏங்கினேன் என்னவளை தீண்டிச் சென்ற தென்றல்
என்னைத் தீண்டாதா என்று ஏங்கினேன் !!!

ஏங்கினேன் என்னவளின் இரு விழிகளில் படும் பார்வையில்
ஒரு பார்வை என் மீது விழாதா என்று!!!

ஏங்கினேன் என்னவளின் அந்த இனிமையான குரலில் ஒரு
வார்த்தை என் பெயராக இருக்கக் கூடாதா என்று!!!

ஏங்கினேன் என்னவளுக்காக துடிக்கும் அவள் இதயம்
எனக்காக ஒரு நொடி துடிக்கக் கூடாதா என்று!!

ஏங்கினேன் இறுதியாக ஏங்கினேன் என் கல்லறையில் அவள்
சூடும் பூக்கள் உதிராதா என்று !!!

எழுதியவர் : சோ.வடிவேல் (31-Jul-15, 10:41 pm)
பார்வை : 105

மேலே