எரிகிறது நெருப்பு

சாராய கங்கையில்
சதா நீராடி
பாராயணம் பண்ணும்
பக்த கோ(கு )டிகளே
உமைக் காக்க
நீராகாரம் இன்றி
நீண்ட வழி
சென்றுவிட்ட
நீதியின் சுடர் பற்றி
தீராராத
வெறி கொண்டு
திடமான
கொள்கையுடன் ஊர்
ஊராகப் பற்றி
எரிகிறது
ஒரு நெருப்பு..

எழுதியவர் : உமை (4-Aug-15, 2:47 am)
பார்வை : 144

மேலே