சந்திப்போமா

உன்னோடு விளையாடினேன்..
உன்னோடுதான் பள்ளிக்கு செல்வேன்..
உன்னைப் பார்த்துதான்
வீட்டுப் பாடங்கள் எழுதுவேன்..
உனக்காகத்தான் உனது
வகுப்புக்கே மாறி வந்தேன்..
உன்னையும் பிரிந்தேன்..
விரைவில் வேலை கிடைக்கும்
வாய்ப்புள்ள படிப்பில் சேர்ந்து..
நம் நண்பர்கள் நடுவில்
நாயகனாய் அன்று நீ..
அன்பு நண்பனே..
இப்போது எங்கிருக்கிறாய்..
உலகம் உருண்டையாமே..
மீண்டும் சந்திப்போமா..
என்றாவது..
குமாரவேலா...?
....
.....இப்போதுதான் கவனித்தேன்..
உனக்காக நான் எழுதிய இக்கவிதை..
என்னுடைய ஆயிரமாவது கவிதை என்பதை ..!

எழுதியவர் : கருணா (5-Aug-15, 8:23 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : santhippomaa
பார்வை : 149

மேலே