ஒன்றில் இரண்டு

ஒரே வெண்பாவை எழுதி அதிலே ஒற்றைப்படைச் சீர்களைச் சேர்த்தால் ஒரு குறள் வெண்பாவாகவும் இரட்டைப்படைச் சீர்களைச் சேர்த்தால் மற்றொரு குறள் வெண்பாவாகவும் எஞ்சும் சீரை விளியாகவும் வைத்துப் பாடுவது "ஒன்றில் இரண்டு".....நானிதை முகநூலில் கற்றேன்...படைக்கிறேன்...உத்தி பகிர்கிறேன்...எமது எழுத்துப் பாவலர்க்காக.....

ஒரு ஆசானுக்கும் மாணவனுக்கும் நடக்கும் பேச்சுரைகளை எழுத முற்பட்டேன்

வினாவுத்தரம்

எதுதான் உலகில் எமதோ பிறர்க்கும்
எதைநான் தரவோ கொடுக்க ? - மதியும்
பொதுவாம் நலமும் பொலிவும் உளதே !
எதுவோ பொதுவோ கொடு !

மாணவனின் வினா :

எதுதான் எமதோ எதைநான் கொடுக்க
பொதுவாம் பொலிவும் எது ?

ஆசானின் பதில் :

உலகில் பிறர்க்குத் தரவோ மதியும்
நலமும் உளதே பொது

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (11-Aug-15, 5:33 pm)
பார்வை : 102

மேலே