காதலிக்காதவர் கவனத்திற்கு

ஒருதலை ஜீவனின் ஓரமாய் மலரும்
இந்த காதலோ
ஒய்யார ஊஞ்சலின்
நடுவில் அமர்ந்த மழலயாய்
ஒவ்வொரு அசைவுக்கும்
நகைத்தும் திகைத்தும் பயந்தும்
சிந்தனையை பறக்க வைக்கும்..

சிந்தனையின் ஒருபாதி காதல்
நகையின் ஒருபாதி காதலி
பறந்து விரிந்த காதலில்
சிக்கனம் நிறையுமாம் கற்பனை......

காதலிக்க மட்டுமே
நேரமிங்கு நிறைந்ததுண்டு- பாவம்
கற்பனை செய்ய ஏது நேரமுண்டு?

காதல் மட்டும் நிர்வாணமாய்
அதில் வரும் சண்டைகளே
காதலை மறைக்குமாம் அணிகளனாய்...

கண்ணோடு காதலித்த காலாவாதிகளெல்லாம்
காதலில் தேர்ச்சி பெற்ற ஞானிகள்

இன்று கைப்பேசியோடு
காதலிக்கும் கொடூரர்கள்தான்
காதலில் அனுபவமுல்ல ஆசான்கள்...


காதலில் நொந்து நகைப்பவனா நீ?
நீ பைத்தியமென நினைப்போரிடம்
நான் சொல்கிறேன்
இன்றிலிருந்து நீதான்
என் வைத்தியன்..


தேர்ந்து வரும் காதலில் -பலர்
தேரத்துடிக்கும் மாணவர்கள்,
தேர்ந்துவிட்ட கவிகளில்-பலர்
நொந்துவந்த தெய்வங்கள்...


தெய்வமில்லையென நகைப்போர்
காதலித்துப் பாருங்கள்
உங்களையும் நான் நினைப்பேன்
காதலில் வெந்து நொந்த தெய்வமென...

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (14-Aug-15, 12:07 am)
பார்வை : 162

மேலே