நல்லது நடந்திருக்கு
மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?
கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே!
மனைவி - என்னது....?
கணவன்: சும்மா... சும்மா சொன்னேன். உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.
மனைவி: என்ன நல்லது?
கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான் செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.
மனைவி - சாப்பாட்டுக்கு வருவீங்க தானே. பார்த்துக்குறேன்.
கணவன் - அய்ய்ய்ய் செல்லகுட்டி ல.....