கைப் பிடிச் சாம்பல்

கண் இமைச் சிறகில்
கனவின் குமிழ்கள்.

விழிக் குழி இருளில்
தனிமையின் மௌனம்.

கண் விழிக் குளத்தில்
கடலு ம் சுருங்கும்.

விளிம்புகள் நோக்கி
அலைகளும் திரும்பும்.

உணர்ச்சிக் கிருமிகள்
அறிவைச் சிரைக்கும்.

பார்வையின் தொகுப்பில்
பனித் துளி புரளும்.

நாற்றிசை கலையும்
நம் வானவில் பேச்சு.

சிறகுகள் மடிய
என் வானம் தரையாகும்.

ஒரு கணப் பார்வையின்
ஊழியில் மிஞ்சும்...

ஒரு கைபிடிச் சாம்பல்.

எழுதியவர் : rameshalam (22-Aug-15, 6:46 pm)
பார்வை : 87

புதிய படைப்புகள்

மேலே