ச்சும்மா ஒரு காதல் கவிதை

இன்று மழை ஏதுமில்லையே...
பின் எப்படி
நீ வரும் வழி தோறும்
கிளைகள் பச்சையம் பூசி
நிற்கின்றனவே...
ஓ.. உன் துப்பட்டா
தொட்டுப் போனதாலா ?
@ @ @ @ @
அழகிய பெண்களை படைக்க
பிரம்மன் வைத்திருக்கும்
அச்சுப் பிரதி நீ ..!
@ @ @ @ @
நீ நடக்கிறாய்..
உன் காதில் தொங்குகிறது
என் இதயம்..!
@ @ @ @ @
தலைப்பு செய்தி என்பது...
உன் தலைப்பூ பற்றிய செய்தி..!
@ @ @ @ @
மழை பெய்யும் போதெல்லாம்
கூப்பாடு போடுகின்றன
மனத் தவளைகள்..!
@ @ @ @
நான் கவிதை சொல்லும் போதெல்லாம்
'சும்மா இரு' என வெட்கிச் சொல்லுகிறாய்..
நானும் அதையே தான் சொல்கிறேன்
கொஞ்சம் சும்மா இரு..
இருக்க விடு..!
@ @ @ @ @
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
