பசி
பசி
கண்கள் இருள
காதுகள் அடைக்க
புலன்கள் மங்கி
கட்டியம் கூற
பசி என்னும் அரக்கன் வருகிறான்
எதிர்த்து போரிடும்
பசித்த வயிறுகள்
தோல்வி காண
வெற்றி விஜயம் தொடங்குகிறான்
புரியமால் அழும் சிசுவின் குரல்
புரிந்தும் வழியறியாது தவிக்கும் தாயின் கண்ணீர்
இவை கண்டு இயலமாஅயில் தீக்குளிக்கும் தந்தையின் மனது
இது தான் எங்கள் ஏழைகளின் அடையாளம்
இப்படிதான் தொடங்குகிறான் அவன் வெற்றி முழக்கத்தை
இன்னும் தொடரும் கடைசி ஏழையின் உயிர் துடிப்பு அடங்கும் வரை
இவை காணும் நேரம் மனது கேட்கும் கேள்வி
"" என்று ஓயும் இந்த பசிப்பிணி கோரம்
அன்று கூறுவோம் நம் நாடு ஒளிர்கிறதென்று
அது வரை செய்வோம் அடுத்த விடுதலை போர்
வெற்றி காணும் வரை