நீ தரும் இந்த இரவு நேர கேளிக்கைகள்

இரவுகளில்
என் தூக்கத்தை கலைத்துவிட்டு
உன்
நினைவுகளைத் தேடித்தருகிறாய்
சமுத்திரத்தில்
ஆர்ப்பரிக்கும் அலைகளால்
கரைகளில்
தேங்கி உடைப்படும்
நூரைய்
குமிழியாய் இதயம்
இலை
யிழந்த கிளையென
நித்திரை
யிழந்த பின்பும்
விழிகள்
வெறுமையை கூட்டிக்கொள்கின்றன
நாடகம்
முடிந்த மேடையாய்
புதிதாய்
ஒன்றுமில்லை
நீ தரும் இந்த

இரவு நேர கேளிக்கைகளில்


பாரதி. செ

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (24-Aug-15, 12:10 pm)
பார்வை : 1282

மேலே