காதல்

உணர்ந்தேன் என் உயிரில் ஒரு இனிமையை
வியந்தேன் எப்படி என் வானம் புதிதனாதென்று
தேடினேன் அந்த கள்வனின் காலடி சுவடுகளை

கண்டுகொண்டேன் என் கண்ணனை
கூறினான் நீ தான் நான் என்று
அமிழ்ந்தேன் அந்த நொடியின் இனிமையில்

தொலைந்தேன் அவன் உயிர் காதலில்
தேடுகிறேன் மீண்டும் அவன் வரவு எப்போதென்று
என்னவனே மீண்டும் வருவாயா

என்னை எனக்கே அறிமுகம் செய்தவனே
என் இமைகளையும் இனிமைகளையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு
காத்திருகிறேன் கண்கள் பூத்திருக்கிறேன்
உன் வரவுக்கு

எழுதியவர் : கவின் மலர் (24-Aug-15, 10:45 am)
சேர்த்தது : kavinmalar
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே