துன்பப்படுத்துவதற்கு சமன்

என்னவள் ஊடல் செய்கிறாள் ......
ஊடல் அதிகமாகின் கூடல் ....
செய்யணும் என் மனமே ....!!!

ஊடல் செய்த என்னவளை ...
கூடல் செய்யாமல் விடுவது ....
துன்பத்தில் இருக்கும் ஒருவரை ....
மேலும் துன்பப்படுத்துவதற்கு சமன்

+
குறள் 1303
+
புலவி.
+
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 223

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Aug-15, 3:44 pm)
பார்வை : 64

மேலே