ரோஜா

ஒரு ரோஜாவிற்கு நான் எழுதிய கடிதம் .............

ரோஜாவே அன்று அவன் எனக்கு கொடுத்த
பரிசு நீ ........................
அழகே உன் கருநிற கூந்தலில்
நான் வாங்கி கொடுத்த ரோஜாவை
சூடினால் அடடா என்ன ஒரு அழகு
பூந்தோட்டத்தில் பூத்து குலுங்கிய பூக்களை போல ........

அன்று அவன் எனக்கு கொடுத்த பரிசு
உன் உயிர் என்று நான் உணரவில்லை .................

இன்றுன் உணர்கிறேன் நீ என் கல்லறைக்கு
வராததால் ......................அவனது வீட்டு வாசலில் என்ன ஒரு மரியாதையை உனக்கு ..........

ரோஜாவே நான் தான் இல்லை இனி அவனுக்கு
நீயாவது அவனை பார்த்து கொள் ...தினமும் அவனை பார்த்து சிறிது விடு ஒரு முறை .......



எழுதியவர் : மணிமேகலை (25-May-11, 5:04 pm)
சேர்த்தது : manimegalai
Tanglish : roja
பார்வை : 573

மேலே