ஆயிரம் ஜென்மங்கள் காத்திருப்பேன்
ஊடல் கலைந்து கூடல் வேளைகளில்
கோபமாடா செல்லம்
என்று நான் கேட்கும் தருணங்களில்
கோபமெல்லாம் இல்லை
என் மீது கொண்ட உங்கள் அன்பு
இப்போது இன்னும் கூடியுள்ளது
இப்படிதான் மொழியுதிர்ப்பாள் அவள்
இப்போது
அவள் ஊடல் கொண்டு செல்கிறாள்
ஊடல்
இது அன்பைக் கூட்டும் கருவிதான்
அதற்க்காக இப்படியாடி செய்வாய்
என்னவளே..!
ஏனடி என் ஆயுள் முழுமைக்கும்
ஊடல் கொண்டு செல்கிறாய்
அடுத்த ஜென்மத்தில் அன்பை பொழியவா?
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல
ஆயிரம் ஜென்மங்கள் காத்திருப்பேன் நான்
உன் அன்பிற்க்காக...