அவள் ஆணையிட்டாள் - நிலைமண்டில ஆசிரியப்பா

எனது காதலி இருக்கும் கூடம்
இனிதே அவளின் லாவண்யம் காட்டுமே;
அதுதான் தருமங்கு வொளியின் வெள்ளம்;
புதிதாய்ப் பொலியும் மகிழ்வு வெளிச்சமே! 1

அவளது அழகிய முகமும், கண்களும்
பவளம் போல்தரும் வசீகரம் ஏராளம்;
கூடத்(து) அலங்கார விளக்கு களெல்லாம்
மடவாள் அழகு கண்டொளி குன்றினவே! 2

கூடத்தின் அலங்கார விளக்கு கெல்லாமே
மடவாள் அழகு கண்டுவெட்கி மயங்கின;
விளக்கு களைஎல்லாம் மீண்டும் பளிச்சென
ஒளிர அவளே ஆணை யிட்டாளே! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-15, 12:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 166

மேலே