ரசிப்போம் வா மனமே
ஏய் மனமே ....
நானும் நீயும் என்னவனுடன் ....
கூடுவோம் வா மனமே வா ....
என்னவன் படும் வேதனையை ....
ரசிப்போம் வா மனமே .....!!!
அவசரபடாதே மனமே .....
அவரின் வேதனையை ....
ரசிக்கும் வரை கூடல் செய்யாதே
ஊடல் செய்வோம் மனமே ....!!!
+
குறள் 1301
+
புலவி.
+
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 221