நான் செய்த பாவம் என்ன💔💔💔

இதயமும் கண்களும்
ஒருநாள் எதிரெதிராய் சந்தித்து
உரையாடிக்கொண்டன
கலைந்து போன காதல் பற்றி!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இதயம் கேட்டது
கண்களிடம்!!!!
நீ செய்த தவறால்
எனக்குள் நுழைந்து
எனை துகள்துகளாய் உடைத்துவிட்டான்
என் உயிரானவன்....
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இன்று எனக்குள் எத்தனை
குமுறல்கள், ஏமாற்றங்கள்!!
எனை கூறுபோட்ட
உனக்கு நான் விதிக்கும் ஆயுள் தண்டனை
கண்களில் கண்ணீர்த்துளிகள்!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இழைத்த தவறால்
கூனிக்குறுகியபடி
தளதளர்த்த குரலில்
கண்கள் கரைந்தது இதயத்திடம்!!!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
குற்றமிழைத்தது நான் தான்
இருந்தும்...
என் குற்றதுக்கான தண்டனையிலும்..
நீ சுமக்கும் வேதனை கொடியது!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
கரங்களின் உதவியுடன்
கண்ணீரெனும் மை கொண்டு
கவிவடித்து
உன் காயமதை போக்குவேன்..
கலங்காதே....
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀

எழுதியவர் : Ran Joo (8-Sep-15, 10:14 am)
பார்வை : 760

மேலே