கவிதை வாழும்

பொழுதின் சாயலில்
பூவின் ஆடலில்
தென்றலின் பாடலில்
ஓடையின் சலனத்தில்
நிலவின் அமுதினில்
நெஞ்சின் காதலில்
கவிதைகள் வாழும் !

பூவிழி மலர்களில்
புன்னகை இதழ்களில்
கன்னக் குழுவினில்
கலைந்தாடும் குழலினில்
குழலினில் சூடிய மலரினில்
அழகு நடம் ஆடும்
அந்த அழகினில்
கவிதை வரிகள் இடம் தேடும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Sep-15, 6:00 pm)
Tanglish : kavithai vaazhum
பார்வை : 95

மேலே