கேட்காமல் கிடைத்த வரம்

எப்பொழுதும் போல அவன்
வரம் கேட்டுக் கொண்டிருக்கிறான்...

எப்பொழுதும் போல
அவனை வரம் கேட்க விடாமல்
இம்சித்துக் கொண்டிருக்கிது அவன் குழந்தை...

எப்பொழுதும் போல
அவனுக்கு தெரிந்திருக்க வில்லை...
அப்படி இம்சிக்கும் வரத்தை
கடவுள் அந்த குழந்தைக்கு
கொடுத்திருக்க கூடும் என்று....

எழுதியவர் : ஜின்னா (11-Sep-15, 1:40 am)
பார்வை : 945

மேலே