தெளியவில்லை என்னில்

காற்றடித்து கிழிந்த காற்றடியாய்
கல்லடி பட்டு கசிந்த கனியாய்
கலங்கி நிற்கிறேன் .....
என் வீட்டார் மாப்பிள்ளை என
யார் யாரயோ சொல்ல
என்னவன் நீ என்று
நான் மட்டும் தான் சொல்ல்கிறேன்.
நீ கூட இல்லை.
தோரணம் கட்டி
மேளம் கொட்டி
தாலி கட்டி கொள்ள
எனக்கும் தான் ஆசை
ஆனாலும் அழுகிறேன்.
கட்டுகிறவன் நீ இல்லையே என்று.
என்னில் நிழலாய் தொடரும்
உன் நினைவுகள் நிஜமாய்
கொல்கிறது என்னை.
மறக்க மட்டுமே நினைத்து
நினைத்து கொண்டே இருக்கிறேன்
உன்னை......
மனித்துவிடு,
நான் உன்னை மறக்கும் இடம்
என் மணவறையா???????
என் கல்லறையா??????
தெரியவில்லை.
என்னில் எதுவும் தெளியவில்லை.......

எழுதியவர் : (11-Sep-15, 12:45 pm)
பார்வை : 127

மேலே