ஒரு வார்த்தை கேக்கணும்

வாக்கு ஒன்னு கொடுத்து புட்டேன் அதனால
இப்ப நாக்கு செத்து போய் நிக்கிறேன்

நாடி நரம்பெல்லாம் துடிக்குதடா
உன் பெயர சொல்லி தான்..

ஒரு நாள் உன்ன பார்க்கணும்
ஒரு வார்த்தை கேக்கணும்

உன்ன உயிர நினைச்ச புள்ளைய ...இப்படி
உதாசீன படுத்திட்டு போய்டுவயா ???

நீ சொன்ன ஒரு வார்த்தை அவ உயிரில கலந்துட்டு ..
அத கலைக்க சொல்லர நீ என்ன கல் நெஞ்சக்காரனா ???

கண்ணாடி நெஞ்சுக்குள்ள கல் வீசிட்டு பொய்டயடா....

கல கலனு சிரிச்ச புள்ள இப்ப கண் கலங்கி நிக்குதடா ..

கண் தூக்கமும் போச்சுதடா நீ கல் வீசிய நாளில் இருந்து ...

கலங்கி போய் நிக்கிறா நீ கண்டுகாம போறயடா ...

கண்ணாலன் நீ தானு கனவெல்லாம் கண்டு புட்டா...

கனவு கண்ட அவள கொஞ்சம் காயப்படாம எழுப்பி விட மாட்டியா???

பக்குவ படாத அந்த பைத்தியகாரிய கொஞ்சம் பக்குவமா வைத்தியம் பார்க்க மாட்டியா ???

வாழ்க்கை கொடுக்க முடியா விட்டாலும் கொஞ்சம் வருத்தம் குறைக்க கூட இருக்க மாட்டியா??

உன் மனைவியா ஏத்து கொள்ளட்டாலும் ஒரு மனிசியா மதிச்சி அவ மன அழுத்தம் குறைக்க அவ கூட இருக்க மாட்டியா ???

எழுதியவர் : வாசு (13-Sep-15, 11:52 pm)
பார்வை : 353

மேலே