நினைவகன்

ரத்தம் பார்த்த முட்களை,
களைந்து எறிந்தாலும்,
வலி பயணப்பட்டது வழிநெடுக,
காயப்படுத்தினாய்,
கலங்கப்படுத்தினாய்,
நோயைக் கொடுத்தாய்,
நொடிகள் கெடுத்தாய்,
பேரன்பை வாரிக்கொடுத்த ஆண்மகனே !
நீ என் வாழ்க்கைக்குள் வந்த மாணிக்கக்கல் !
அதேநேரம் என் பாதையெல்லாம் நோகவைக்கும்,
கால் தைத்த முள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (22-Sep-15, 9:01 pm)
பார்வை : 72

மேலே