இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்

சிந்தனையை தூண்டும்
கருத்துக்களால்
எழுத்தில் தானம் !

இனிய இதயத்தால்
ரத்த தானம் !

பல புள்ளிகள் எடுத்து
பெரும் புள்ளியானீர் !

பரவசமாய்
எழுத்து தளத்தில்
பிரகாசித்தீர் !

தமிழ் ரசிகனுக்கு
எழுத்து தள
ரசிகர்கள்
ஏராளம் !

அடாது மழை பெய்தாலும்
விடாது கொடைபிடிப்பேன் என

பரிசுகள் கை நழுவிய போதும்
எழுத்து தளத்தில்
விடாது கவியால் கொடை பிடித்தீர் !

அங்கீகாரம்
ஆரோக்கியமான
வளர்ச்சிக்கு
அடிவாரம் ..எனினும்

நான் நானாய் தான்
இருப்பேன் என
நடை போட்டு
நட்புணர்ச்சியுடன்
நல் வளர்ச்சியால்
நாயகனாய் நின்றீர் !

கருத்தான
கருத்துக்களை
எழுத்தில்
சிற்பமாய்
செதுக்கிய
சந்தோஷ் குமார் ..நீர் ....
தமிழ் வளர்ச்சிக்காக
கொடி காத்த
திருப்பூர் குமரன் ..

பிறப்பையும் சுவாசத்தையும்
தமிழுக்கு அடமானம் வைத்த .உம்

எதிர் காலம்
சந்தோசமாய்
சலனமற்று
சாந்தியுடன் அமைய

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

விழிப்போம் !
எழுவோம் !
வளர்வோம்!
உயர்வோம் !

தமிழ் எழுத்துக்களால் ....

தொடரட்டும் உம்
உற்சாகமான
தமிழ் முழக்கம் !!

=====கிருபா கணேஷ் ======

எழுதியவர் : கிருபா கணேஷ் (29-Sep-15, 3:03 pm)
பார்வை : 389

மேலே