காரணங்கள்

கடலோரம்..மணல்
திரும்ப திரும்ப ..
வளையினுள்
போவதும் வருவதுமாய்..
சில நண்டுகள்..
காரணம் ஏதேனும் இருக்கலாம்..
எனக்குத்தான் தெரியவில்லை..
அது மட்டுமா..
எனக்கு தெரியாதது..?
ஏன் நான் கூட
சிலரை..
மீண்டும் மீண்டும்
நம்புகிறேன்?
எனக்கு தெரிந்த ஒரே காரணம்..
அவர்கள் நல்லவர்கள்..
என்பதுதான்!